என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீட்டு வேலை"
- 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
- படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) மற்றும் டாடா இன்ஸ்டியூடிட் சோசியல் சைன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.
இதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்வது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளுக்கு 98 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.
அவர்களுடன் ஒப்பிடுகையில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்கள் ஊதியம் இல்லா வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பில் ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட 3 மடங்கு அதிக நேரத்தை வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று குடும்பம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வயது குழந்தைகளின் இருப்பு, ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் வாழும் பெண்கள் சராசரியாக, பல தலைமுறை குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக ஊதியம் பெறாத வேலைகளை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டு வேலை செய்யும் தொழிாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
- அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் இதுவரை பதிவுசெய்யாத வீட்டுப்பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட இணைய–தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இயலாத வீட்டு பணியாளர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்று சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்